செப். 28-இல்  ஓய்வூதியர் குறை தீர் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஓய்வூதியர்களுக்கான மாதாந்திர குறை தீர் கூட்டம் செப். 28-ம் தேதி நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஓய்வூதியர்களுக்கான மாதாந்திர குறை தீர் கூட்டம் செப். 28-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான மாதாந்திர குறை தீர் கூட்டம் செப். 28-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  
தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் நிலுவையிலுள்ள குடும்ப ஓய்வூதியம், வாழ்நாள் நிலுவை, குடும்பப் பாதுகாப்பு நிதி விண்ணப்பங்கள், திருத்தப்பட்ட ஓய்வூதியங்கள், கூடுதல் ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை தெளிவாகக் குறிப்பிட்டு, விண்ணப்பத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்ட விண்ணப்பம்" என தலைப்பிட்டு தஞ்சாவூர் மாவட்டக் கருவூல அலுவலருக்கு செப். 24-ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  
தஞ்சாவூர் மாவட்டக் கருவூல அலுவலரின் அதிகார வரம்புக்குட்பட்ட அனைத்து விண்ணப்பங்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு,  குறைதீர் கூட்டத்தின்போது உரிய ஆணைகள் வழங்கப்படும். மேலும், கூட்டத்தின்போது நாமினேசன் தாக்கல் செய்தல், திருத்தப்பட்ட ஓய்வூதிய விகிதங்களை ஓய்வூதிய புத்தகங்களில் பதிவுகள் மேற்கொள்ளுதல் போன்ற ஓய்வூதியம் தொடர்பான சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.   கூட்டத்தில் திருத்தப்பட்ட ஓய்வூதியத்துக்கான கணக்கீட்டுத் தாள்கள் வழங்கப்படும். எனவே ஓய்வூதியர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com