பேராவூரணி நகர வர்த்தக கழக நிர்வாகிகள் பணியேற்பு விழா வியாழக்கிழமை மாலை வர்த்தக கழக அலுவலக கட்டடத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினரும், பேரூராட்சி முன்னாள் தலைவருமான என்.அசோக்குமார் தலைமை வகித்தார். விழாவில் நகர வர்த்தக கழக தலைவராக ஆர்.பி.ராஜேந்திரன், செயலாளராக ஏ.டி.எஸ்.குமரேசன், பொருளாளராக எஸ்.ஜகுபர்அலி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
எம்எல்ஏ மா.கோவிந்தராசு, முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் அசோக்குமார் மற்றும் பலர் வாழ்த்திப் பேசினர். விழாவில் கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர்கள் எஸ்.கந்தப்பன், எம்.ஏ.லத்தீப், க.அன்பழகன், மு.சீனிவாசன், எஸ்.டி.டி.சிதம்பரம், கே.பி.நல்லசாமி, முன்னாள் நிர்வாகிகள் பி.எஸ்.அப்துல்லா, ஆர்.வெங்கடேசன், ஏ.சி.சி.ராஜா மற்றும் அரசியல், வர்த்தக பிரமுகர்கள், பொது உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.