ராஜகிரி ஊராட்சியில் அம்மா திட்ட முகாம்

பாபநாசம் வட்டம், ராஜகிரி ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் வட்டம், ராஜகிரி ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு பாபநாசம் வட்டாட்சியர் மாணிக்கராஜ் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் கே. கோபிநாதன்,  முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.ஹெச். முகம்மதுகாசீம்,  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  ஷோக்தாவூத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
முகாமில்,  பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல்,  முதியோர்,  விதவை,  மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட இனங்கள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன. இதில்,  உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான தீர்வு ஆணைகளை வட்டாட்சியர் மாணிக்கராஜ்,  முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் கே.கோபிநாதன் உள்ளிட்டோர் பயனாளிகளிடம் வழங்கினர். இதில் பள்ளி தாளாளர்ஆர். நூர்முகம்மது, காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்க நிறுவனர் முபாரக், கூட்டுறவு சங்கத் தலைவர் காதர்ஒலி, மண்டல துணை வட்டாட்சியர் செல்வராஜ், வட்ட வழங்கல் அலுவலர் பூங்கொடி மற்றும் சரக கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த் துறை, கூட்டுறவு துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக,  வருவாய் அதிகாரி ராஜ்குமார் வரவேற்றார். நிறைவில்,  கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com