தூய்மை இந்தியா இயக்க உறுதிமொழி ஏற்பு

பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை இந்தியா இயக்க முன்னெடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.


பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை இந்தியா இயக்க முன்னெடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் தூய்மை இந்தியா இயக்க  திட்டத்தின் நான்காம் ஆண்டு நிறைவையொட்டி பொதுமக்கள் பங்களிப்புடன்  தூய்மை இந்தியா இயக்க தன்னார்வ தொண்டு தொடர்பாக  உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ். சடையப்பன் தலைமை வகித்தார். கிராம ஊராட்சிகள் ஆணையர் த. குமரவடிவேல் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு, நமது தேசத்தை தூய்மையாக வைத்திருக்க முயற்சி செய்வேன்; அதற்காக நேரத்தை ஒதுக்குவேன். காந்தி கண்ட வளர்ச்சியடைந்த தூய்மை இந்தியா உருவாக பாடுபடுவேன் என்று  உறுதிமொழி ஏற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com