மூமுக நிர்வாகிகள் அமமுகவுக்கு ஆதரவு

மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் அமமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின், தஞ்சை,


மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் அமமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதன் மாவட்டச் செயலாளர்கள் ஜெயராஜ் (திருவாரூர்), இளங்கோவன் (தஞ்சாவூர்), அருண்குமார் (நாகை) ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
 அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனத் தலைவர் ந. சேதுராமன், மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தலில் திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்ட நிர்வாகிகளை கலந்து ஆலோசிக்காமல், அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததாலும், மாவட்ட நிர்வாகிகளை அதிமுக அரசு கடந்த தேர்தல் முதல் மதிக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருவதாலும், அகில இந்திய மூவேந்தர் முன்னணியின் திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்ட நிர்வாகிகள் அமமுகவுக்கு ஆதரவை தெரிவிக்கிறோம். அமமுகவின் வெற்றிக்கு முழு மனதுடன் தேர்தல் பணியாற்ற உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com