கும்பகோணத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 2 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
கும்பகோணம் அருகே அண்ணலக்கிரஹம், மாத்தி கேட் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் பறக்கும் படையினர் சோதனையிட்டபோது, ரூ. 2 லட்சம் ரொக்கம் இருந்தது. இதற்குரிய ஆவணம் அவரிடம் இல்லை. எனவே, இத்தொகையைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.