கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம்

பாபநாசம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திங்கள்கிழமை கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் கைப்பற்றி விசாரிக்கின்றனர். 

பாபநாசம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திங்கள்கிழமை கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் கைப்பற்றி விசாரிக்கின்றனர். 
பாபநாசம் அருகே வீரமாங்குடி கொள்ளிடம் ஆற்றில் திங்கள்கிழமை 35 வயது மதிக்கத்தக்க  இளைஞரின் சடலம் கிடந்தது தெரிய வந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் வீரமாங்குடி கிராம நிர்வாக  அதிகாரி மற்றும் கபிஸ்தலம் போலீஸாருக்கு தவவல் கொடுத்தனர். இதன்பேரில்,  சம்பவ  இடத்துக்கு வந்த போலீஸார்,  சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் புகாரின் பேரில்  வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com