மங்கனூர் திருவிழாவுக்குஏப். 22 முதல் 24 வரை சிறப்புப் பேருந்துகள்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகேயுள்ள மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலயத் திருவிழாவுக்காக ஏப். 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.


புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகேயுள்ள மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலயத் திருவிழாவுக்காக ஏப். 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலயத் திருவிழா ஏப். 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறவுளளது. இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) ஏப். 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை மங்கனூருக்கு விழாப் பேருந்துகளை இரவு, பகல் முழுவதும் இயக்கவுள்ளது. இப்பேருந்துகள் தஞ்சாவூர் - மங்கனூர், திருச்சி - மங்கனூர், திருக்காட்டுப்பள்ளி - மங்கனூர், கந்தர்வகோட்டை - மங்கனூர் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com