பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கத்தின் வட்டக்கிளைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இதில், மத்திய அரசு 3 சதவீத அகவிலைப்படி வழங்குதைப்போல, தமிழக அரசும் 2019, ஜனவரி 1-ம் தேதி முதல் கணக்கிட்டு அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் என். சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர்.ரெஜினால்டு செல்வகுமார், செயலர் டி.மோகன்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.