வாக்குச் சாவடிகளில் ஆணையர் ஆய்வு

தஞ்சாவூர் மாநகரில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாநகராட்சி ஆணையர் பி. ஜானகி ரவீந்திரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் மாநகரில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாநகராட்சி ஆணையர் பி. ஜானகி ரவீந்திரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மாநகரில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 
வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மின்சாரம், குடிநீர், கழிப்பறை, மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாக சாய்வு தளம் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கிறதா என மாநகராட்சி ஆணையர் பி. ஜானகி ரவீந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
அப்போது, உதவிப் பொறியாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
இதில்,  குடிநீர் வசதி இல்லாத மையங்களில் உடனடியாக குடிநீர் வசதி ஏற்படுத்தவும், சாய்தளம் அமைக்கப்படாத வாக்குப் பதிவு மையங்களில் சாய்தளம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com