பேராவூரணி அருகே உள்ள குளமங்கலம் வடக்கு பகுதியில் இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சிற்றம்பலத்தில் ஹரிஷ் மருத்துவமனை என்ற பெயரில் இயங்கி வரும் சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் சார்பில் இந்த முகாம் நடத்தப்பட்டது. பேராவூரணி அருகேயுள்ள குளமங்கலம் வடக்கு ஸ்ரீ காத்தாயி அம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த முகாமுக்கு ஹரிஷ் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் வி.செளந்தரராஜன் தலைமை வகித்தார். முகாமை டாக்டர் டி.நவரத்தினசாமி தொடங்கி வைத்தார். மருத்துவர்கள் சி.சீனிவாசன், தியாகராஜன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவர்கள் பொன்னிஷா திருவள்ளுவர், ரஞ்சித், இந்திராணி, சேது, வெங்கடேஷ், நிஷானி, ரிஷ்பனா பேகம், அம்சானி மற்றும் கண் மருத்துவ நுட்பநர்கள் திரவியம், பால்ராஜ், மருந்தாளுநர் சரவணன் ஆகியோர் நோயாளிகளை பரிசோதித்து இலவச மருந்து மாத்திரைகளை வழங்கினார்.
முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. முகாம் ஏற்பாடுகளை திருவள்ளுவர், ஆசிரியர் செல்வம், சாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.