திருப்பாலைத்துறையில் ஆடிப்பூர வழிபாடு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் திருப்பாலைத்துறையில் உள்ள தவளவெண்ணகை அம்மன் உடனுறை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் திருப்பாலைத்துறையில் உள்ள தவளவெண்ணகை அம்மன் உடனுறை  பாலைவனநாதர் கோயிலில்  ஆடிப்பூரத்தையொட்டி சனிக்கிழமை மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விழாவையொட்டி பாலைவனநாதர், தவளவெண்ணகை அம்மன், விநாயகர்,முருகர் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெற்றன.  இந்து சமய அறநிலையத் துறையினர், பாபநாசம் ஆன்மிக பேரவை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், ஓய்வு பெற்ற ஆசிரியர் தனபால், பாபநாசம் வர்த்தக சங்கத் தலைவர் ஜி. குமார், சி.யூ.பி. சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com