பாபநாசத்தில் நிழற்குடை திறப்பு

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் கடைவீதியில் போக்குவரத்து காவலர் நிழற்குடை திறப்பு விழா ஞாயிற்றுகிழழை நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் கடைவீதியில் போக்குவரத்து காவலர் நிழற்குடை திறப்பு விழா ஞாயிற்றுகிழழை நடைபெற்றது.
பாபநாசம் லயன்ஸ் சங்கம்,பாபநாசம் பெனிபிட் பண்ட்  உள்ளிட்ட நிறுவனங்களின் நிதியுதவி ரூ. 60 ஆயிரத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடை திறப்பு விழாவுக்கு பாபநாசம் லயன்ஸ் சங்க உடனடி முன்னாள் தலைவர் சாப்ஜான்  தலைமை வகித்தார். 
பாபநாசம் பெனிபிட் பண்ட் நிர்வாக இயக்குநர் டி. ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.  பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளர் நந்தகோபால் 
நிழற்குடையை திறந்து வைத்துப் பேசினார். லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர்கள் ஆர். சம்பந்தம்,பி.எல்.எம். பழனியப்பன்,முகம்மது இப்ராஹூம், வி.எஸ். செல்வராஜ், பாண்டியன், முத்தமிழ்செல்வன், பிரபாகரன்,முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர்கள் தி.ம. நாகராஜன்,ஷேக்தாவூது சாரதா மகளிர் மன்ற  தலைவி தில்லைநாயகி,உலக திருக்குறள் மைய துணை செயலர் குருசாமி உள்ளிட்ட  லயன்ஸ், ரோட்டரி சங்க நிர்வாகிகள்,காவல் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com