தஞ்சாவூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் நடந்து சென்றவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
தஞ்சாவூர் கீழ வஸ்தாசாவடி அம்மாகுளம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (57). இவர் ஆக. 2-ம் தேதி இரவு யாகப்பா சாவடி பட்டுக்கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில், பலத்தக் காயமடைந்த இவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கணேசன் சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா போலீஸார் விசாரித்தனர்.