பட்டுக்கோட்டையில் மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டி
By DIN | Published On : 09th August 2019 09:17 AM | Last Updated : 09th August 2019 09:17 AM | அ+அ அ- |

பட்டுக்கோட்டையில் ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சதுரங்கப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலர்கள் சுப.சிவசாமி, சி. மீனாசுந்தரி ஆகியோர் போட்டியைத் தொடங்கி வைத்தனர்.
போட்டியில், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளைச் சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இவர்களில் பாளமுத்தி, கொண்டிக்குளம், எட்டுப்புளிக்காடு, த.மேலக்காடு ஆகிய ஊராட்சிப் பள்ளிகளில் பயிலும் 3 மாணவர்கள், 3 மாணவிகள் என மொத்தம் 6 பேர் வெற்றி பெற்றனர். ஆசிரியர்கள் செ.கணேஷ்குமார் அ.ஜெயக்குமார், கோ.ராஜமுருகன் ஆகியோர் போட்டி நடுவர்காக செயல்பட்டனர்.