திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனை எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனை எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனை எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்குப் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை உடனே நியமிக்க வேண்டும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தும் போக்கைக் கைவிட வேண்டும். கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை உடனே நியமித்து 24 மணி நேரமும் மருத்துவர்களைப் பணி செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றியக் குழு வட பகுதி பொறுப்பாளர் ஏ. காளிதாஸ், ஒன்றியத் துணைச் செயலர் கே. செந்தில்குமார், ஒன்றியக் குழு உறுப்பினர் ந. மோகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலர் வீ. கல்யானசுந்தரம், பூதலூர் ஒன்றியச் செயலர் இரா. ராமச்சந்திரன், இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் ஆர்.ஆர். முகில், மாதர் சம்மேளன ஒன்றியச் செயலர் ப. கண்ணகி, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் கே. துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com