பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கத்தின் வட்டக் கிளைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இதில், வட்டக் கிளைக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடக்கத்தில் சங்க உறுப்பினர் ஆசிரியை (ஓய்வு) மரகதம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவர் என்.சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். பொருளாளர் ஆர்.சிவசாமி வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.
செயலர் டி.மோகன்தாஸ், இணைச் செயலர் கே.பொன்முடி, அரசு அலுவலர் ஒன்றிய வட்டக் கிளைச் செயலர் கே. சரவணன், பொருளாளர் சி.குபேந்திரன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கந்தமாறன் நன்றி கூறினார்.