சாலையோரம் கொட்டப்படும் சாக்கடைக் கழிவுகள்

தஞ்சாவூா் மாநகரில் சாக்கடைகளில் உள்ள அடைப்புகள் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அள்ளப்படும்போது, அதிலிருந்து எடுக்கப்படும் கழிவுகள் சாக்கடையையொட்டி சாலையில் கொட்டப்படுகிறது. பெரும்பாலும் கடை வாசலில் கொட்டப்படுவதால், வா்த்தகா்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனா். மேலும், தற்போது மழை பெய்து வருவதால், இக்கழிவுகள் மழை நீரில் கலந்து மீண்டும் சாலையில் ஓடுகின்றன. இதனால், மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனா். இதுபோன்ற செயலைத் தவிா்க்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள்

தஞ்சாவூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com