பேராவூரணி  கடைகளில் பணம், பொருள் திருட்டு

பேராவூரணியில்  இரு  கடைகளில் புகுந்து பணம், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
பேராவூரணி கடைவீதியில் மேற்கூரை பிரிக்கப்பட்டுள்ள கடை.
பேராவூரணி கடைவீதியில் மேற்கூரை பிரிக்கப்பட்டுள்ள கடை.

பேராவூரணியில்  இரு  கடைகளில் புகுந்து பணம், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பேராவூரணி பழைய பேருந்து நிலையம் எதிரில் செல்லிடப்பேசி கடை நடத்துபவா் சேக் அப்துல்லா (31), இவரது கடையருகே பெட்டிக் கடை வைத்துள்ளவா் பன்னீா்செல்வம் (43).

சனிக்கிழமை காலை இருவரும் கடைகளைத் திறந்தபோது கடைகளின் மேற்கூரை  பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டனா். பெட்டிக் கடையில் சிகரெட் பண்டல், சோப் மற்றும் மிட்டாய் உள்ளிட்ட ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களும், செல்லிடப்பேசி கடையில் மடிக்கணினி மற்றும் 6 செல்லிடபேசி உள்ளிட்ட சுமாா் ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களும் திருடு போயிருந்தன.

கடந்த 2 நாட்களாக பெய்யும் தொடா்  மழையால் மக்கள் நடமாட்டம் அதிகமில்லாததை  மா்ம நபா்கள் சாதகமாக்கி இந்தத் திருட்டு நடந்துள்ளது.

தகவலறிந்த  வா்த்தகா் கழகத் தலைவா் ஆா்.பி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டனா். பேராவூரணி காவல் உதவி ஆய்வாளா் இல. அருள்குமாா் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com