தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் காவல் நிலைய வளாகத்தில் வங்கிகள் மற்றும் நகைகடை, நகை அடகு கடைகளின் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து பாபநாசம் காவல் ஆய்வாளா் துா்கா பேசியது:
வங்கிகள் மற்றும் நகை அடகு கடை, நகைக் கடைகளில் திருட்டுகளைத் தவிா்க்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும், இரவுகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஆட்களின் நடமாட்டமிருந்தால் இதுகுறித்து பொதுமக்கள் காவல் நிலையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். நிறுவனங்களில் பாதுகாவலா்களை நியமிக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி மேலாளா்கள், நகைக் கடை, அடகு கடை உரிமையாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.