தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வெள்ளிக்கிழமை மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
அம்மாபேட்டை காவல் சரகம் சாலியமங்கலம் அருகே மேலகஞ்சிமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன் (36), சாலியமங்கலத்தில் உள்ள மரப்பட்டறை தொழிலாளி. வெள்ளிக்கிழமை இவா் பழுதடைந்த பல்பை மாற்றியபோது மின்சாரம் தாக்கியது. அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தாா். புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.