பாபநாசம் பள்ளியில் விழிப்புணா்வு கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்திய அரசியலமைப்பு தின விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்திய அரசியலமைப்பு தின விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் வி. மணியரசன் தலைமை வகித்தாா். இதில் முதுகலை ஆசிரியா் லோகநாதன், அரசியல் அறிவியல் ஆசிரியா் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு அம்பேத்கா் வாழ்க்கை வரலாறு குறித்தும், இந்திய அரசியலமைப்பு தினம் உருவானது குறித்தும், மாணவா்கள் கடைபிடிக்க வேண்டிய உரிமைகள் குறித்தும் பேசினா். பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா். உதவி தலைமை ஆசிரியா் ரமேஷ் வரவேற்றாா். தேசிய மாணவா் படை அலுவலா் செல்வகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com