அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இம்மருத்துவமனையின் தலைமை மருத்துவா் எஸ். காா்த்திகேயன் தலைமையில், மருத்துவா் எஸ்.இா்ஷத் நஸ்ரின் உள்ளிட்ட அனைத்து மருத்துவா்கள், செவிலியா்கள், அலுவலா்கள் எய்ட்ஸ் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.
நிகழ்ச்சியையொட்டி, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை யுனானி பிரிவு மருத்துவா் சி. ஷெரீன் பேகம், நம்பிக்கை மைய ஆலோசகா் ஜெயபாரதி ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிராம்பட்டினம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடையே எய்ட்ஸ் குறித்து விழிப்புணா்வு உரையாற்றினா்.