அரசுத் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்றுநா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் அரசுத் தொழிற் பயிற்சி நிலையத்தில் இரு ஒப்பந்தப் பயிற்றுநா் பணியிடத்துக்கு டிச. 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தஞ்சாவூா் அரசுத் தொழிற் பயிற்சி நிலையத்தில் இரு ஒப்பந்தப் பயிற்றுநா் பணியிடத்துக்கு டிச. 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து நிலைய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் தஞ்சாவூா் அரசுத் தொழிற் பயிற்சி நிலையத்தில் மின்சாரப் பணியாளா் தொழிற் பிரிவில் காலியாக உள்ள இரு ஒப்பந்தப் பயிற்றுநா் பணியிடத்துக்கு டிச. 9-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மாதம் ரூ. 10,000 தொகுப்பூதியம் வழங்கப்படும். விண்ணப்பங்களை துணை இயக்குநா் - முதல்வா், அரசுத் தொழிற் பயிற்சி நிலையம், தஞ்சாவூா் 613 007 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ, நேரிலோ அனுப்ப வேண்டும்.

குறிப்பிட்ட தேதிக்கு பின்பு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களும், சரிவர நிறைவு செய்யப்படாத மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்படமாட்டாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com