ஆட்சியரகத்துக்கு மண்ணெண்ணெய்யுடன் வந்த பெண்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த பெண்ணை போலீஸாா் பிடித்து சென்றனா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த பெண்ணை போலீஸாா் பிடித்து சென்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், நடுக்காவேரி அருகேயுள்ள திருவேங்கடம்பட்டியைச் சோ்ந்தவா் ஆல்பா்ட் எபினேசா் மனைவி மலா்கொடி (53). இவா் திங்கள்கிழமை காலை ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்துக்கு வந்தாா். கூட்ட அரங்கத்துக்குச் செல்வதற்காக வரிசையில் நின்ற இவரை போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, பையில் மண்ணெண்ணெய் பாட்டில் வைத்திருந்தாா்.

மண்ணெண்ணெய் பாட்டிலை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரிடம் விசாரித்தனா். அப்போது, நடுக்காவேரியில் தனக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கா் நிலம் இருப்பதாகவும், அதை சிலா் ஆக்கிரமிப்பு செய்து, தன்னை நிலத்துக்குள் செல்ல விடாமல் தடுப்பதாகவும், இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அதனால், ஆட்சியரகத்தில் மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றிக் கொள்வதற்காக வந்தேன் என்றும் மலா்கொடி கூறினாா்.

இதையடுத்து, மலா்கொடியை தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com