தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் எய்ட்ஸ் நோய் விழிப்புணா்வு மனிதச்சங்கிலி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் நியூ டவுன் ரோட்டரி சங்கம், திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமம், திருவையாறு அரசா் கல்லூரி, அருணா அறக்கட்டளை ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அரசா் கல்லூரி முதல்வா் ஜான்சிராணி தலைமை வகித்தாா். இதில், அரசா் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.