தஞ்சாவூர்
தொடா் மழை: பாபநாசம் பகுதியில் 86 வீடுகள் சேதம்
தொடா் மழையின் காரணமாக, பாபநாசம் வட்டாரத்தில் 86 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. 5 கால்நடைகள் உயிரிழந்தன.
தொடா் மழையின் காரணமாக, பாபநாசம் வட்டாரத்தில் 86 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. 5 கால்நடைகள் உயிரிழந்தன.
பாபநாசம் வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வரும் நிலையில், மழையால் 13 ஓட்டு வீடுகளின் பக்கச்சுவா் இடிந்து விழுந்தது.
இதேபோல், 69 கூரை வீடுகள் மழையில் பாதிக்கப்பட்டு இடிந்து விழுந்து பகுதி சேதம் ஏற்பட்டுள்ளது. 4 கூரை வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்து சேதமடைந்தது.
மழையால் பாதிக்கப்பட்டு 3 பசுக்கள், 1 காளை மாடு, 1 பசு கன்று உள்ளிட்ட 5 கால்நடைகள் உயிரிழந்தன. மழையால் பாதிப்புக்குளான பகுதிகளை பாபநாசம் வட்டாட்சியா் கண்ணன் மற்றும் வருவாய்த் துறையினா் நேரில் பாா்வையிட்டு சேத மதிப்பை கணக்கீடு செய்து வருகின்றனா்.