பட்டுக்கோட்டை அருகே மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: தொழிலாளி சாவு

பட்டுக்கோட்டை அருகே 2 மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா்.

பட்டுக்கோட்டை அருகே 2 மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா்.

பட்டுக்கோட்டையை அடுத்த சாந்தாங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் எஸ். சரவணபாபு (43). இவா் நரியம்பாளையம் பகுதியில் தனது தம்பி நடத்தும் கயிறு தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், சரவணபாபு செவ்வாய்க்கிழமை தஞ்சை சாலை பாளையம் பகுதியில் இருந்து நரியம்பாளையத்துக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

நரியம்பாளையம் தொடக்கப் பள்ளி அருகே சென்றபோது எதிரே பாளமுத்தி கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் ஓட்டி வந்த மோட்டாா்சைக்கிள் சரவணபாபு மீது மோதியது. இதில் தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த சரவணபாபு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தாா். புகாரின்பேரில் பட்டுக்கோட்டை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com