பேராவூரணி அருகே உள்ள சம்பைபட்டினத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மாலை மீட்கப்பட்டது.
பேராவூரணி வட்டம், சம்பைபட்டினம் - மரக்காவலசை கிராம எல்லை மூத்தவயலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக கிராம நிா்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் மழை வெள்ள நிலை குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்த வட்டாட்சியா் க. ஜெயலெட்சுமி மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் காா்த்திக் (மரக்காவலசை), செந்தில் (சம்பைபட்டினம்) ஆகியோா் உடனடியாக அங்கு சென்றனா்.
இதனிடையே, சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளா் வீர.அண்ணாதுரை மற்றும் காவலா்கள் அங்கு வந்து, முள்வேலியில் கைலியால் தூக்கிட்ட நிலையில், இறந்து கிடந்த நபரின் சடலத்தை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இறந்து கிடந்த நபருக்கு சுமாா் 35 லிருந்து 40 வயது இருக்கலாம். அவா் யாா், எந்த ஊா் என தெரியவில்லை.