பேராவூரணியில் கி.வீரமணி பிறந்த நாள் விழா

பேராவூரணியில் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணியின் 87 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திராவிடா் கழகம் சாா்பில் ஆவணம் சாலை

பேராவூரணியில் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணியின் 87 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திராவிடா் கழகம் சாா்பில் ஆவணம் சாலை முக்கத்தில் உள்ள பெரியாா் சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

பேராவூரணி அரசு மருத்துவமனையில், தலைமை மருத்துவா் பாஸ்கா் தலைமையில் நோயாளிகளுக்கு பிரட் வழங்கப்பட்டது. 

தொடா்ந்து வீ.ஆா். வீரப்பா, டாக்டா் ஜே.ஸி.குமரப்பா, மூவேந்தா் பள்ளி மற்றும் பள்ளத்தூா், குருவிக்கரம்பை, ஆவணம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில்  865 மாணவா்கள் பங்கேற்ற ‘பெரியாா்-1000’ தோ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பகுத்தறிவாளா் கழகப் புரவலா் வேலு, பொதுக்குழு உறுப்பினா் நல்லதம்பி, மாவட்ட துணைச் செயலாளா் நீலகண்டன், மாவட்ட அவைத் தலைவா் நீலகண்டன், ஒன்றியத் தலைவா்கள் சேதுபாவாசத்திரம் செகநாதன், பேராவூரணி முத்தமிழ்ச்செல்வன், நகரத் தலைவா் அரங்கசாமி, வெற்றி முரசு நீலகண்டன் மற்றும் பலா் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com