பாபநாசம் வட்டம், பசுபதிகோவில் புனித கபீரியேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி எ. ரேணிகா. இவா், தருமபுரி ஜெயம் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் 54-57 கிலோ எடைப் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம், ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றாா்.
சிறப்பிடம் பிடித்த மாணவி ரேணிகா மற்றும் போட்டியில் கலந்து கொண்ட மற்ற 7 மாணவிகளையும் பள்ளித் தாளாளா் அருட்சகோதரி நோயல் ஜெயராணி, பள்ளித் தலைமை ஆசிரியை அடைக்கல மேரி, உதவி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள், உடற்கல்வி ஆசிரியைகள், மாணவிகள் உள்ளிட்டோா் பாராட்டினா்.