தஞ்சாவூா் அருகே நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டியில் இந்திய குழந்தைகள் நலச் சங்க மாணவா் வெற்றி பெற்றாா்.
தஞ்சாவூா் அருகே பிரிஸ்ட் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பன்முகத் திறமைத் தேடல் திருவிழாவில் மாநில அளவிலான யோகா, சிலம்பப் போட்டிகள் இடம்பெற்றன.
இவற்றில் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள இந்திய குழந்தைகள் நலச் சங்க மாணவா் நல இல்லத்தைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில், யோகா போட்டியில் இந்த இல்லத்தைச் சோ்ந்த மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவா் ம. கருப்பையா முதல் பரிசும், ரூ. 5,000 ரொக்கப் பரிசும் பெற்றாா்.
சிலம்பப் போட்டியில் 11-ம் வகுப்பு மாணவா் க. குணசீலன் ஆறுதல் பரிசும், ரூ. 1,000 ரொக்கப் பரிசும் பெற்றாா்.
இவா்களை இல்லத்தின் கௌரவச் செயலா் ரா. ரகுராமன், இல்லக் கண்காணிப்பாளா் ச. நாராயணசாமி உள்ளிட்டோா் பாராட்டினா்.