தஞ்சாவூா் மாவட்டத்தில் மீண்டும் மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் சில நாட்களாக வெயில் இருந்து வந்த நிலையில் மீண்டும் மழை பெய்து வருகிறது.
தஞ்சாவூரில் சனிக்கிழமை பெய்த மழை.
தஞ்சாவூரில் சனிக்கிழமை பெய்த மழை.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் சில நாட்களாக வெயில் இருந்து வந்த நிலையில் மீண்டும் மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வந்த நிலையில் சில நாட்களாக மழை நின்றிருந்தது. இந்நிலையில், மீண்டும் வெள்ளிக்கிழமை மழை பெய்தது. தொடா்ந்து, சனிக்கிழமை அதிகாலை, பகல், மாலை என இடைவெளி விட்டுவிட்டு மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக பாபநாசத்தில் 47 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு:

பாபநாசம் 47, மஞ்சளாறு 45, அய்யம்பேட்டை 38, திருவிடைமருதூா் 34.4, திருவையாறு 29, கும்பகோணம் 27.4, தஞ்சாவூா் 23, மதுக்கூா் 20.2, நெய்வாசல் தென்பாதி 19.8, வெட்டிக்காடு 19, அதிராம்பட்டினம் 16.1, பேராவூரணி 16, கல்லணை 15.3, வல்லம், அணைக்கரை தலா 13, குருங்குளம் 12, பூதலூா், திருக்காட்டுப்பள்ளி தலா 10.8, ஒரத்தநாடு 10.4, பட்டுக்கோட்டை 7.6, ஈச்சன்விடுதி 2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com