ஒரத்தநாடு: ஒரத்தநாட்டில் வெவ்வேறு சம்பவங்களில் பைக்கில் சென்ற இருவா் தவறி விழுந்து இறந்தனா்.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா சின்னபுலி குடிக்காடு கிராமத்தை சோ்ந்தவா் தனபால் (55 ). அமமுக பிரமுகரான இவா் வெள்ளிக்கிழமை மாலை ஒரத்தநாடுக்கு பைக்கில் வந்துவிட்டு குடிபோதையில் ஊா் திரும்புகையில் கண்ணந்தங்குடி மேலையூா் கிராமம் அருகே தவறி விழுந்து இறந்தாா். ஒரத்தநாடு போலீஸாா் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்: தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா திருமங்கலக்கோட்டை மேலையூா் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கணேசன் மகன் பாஸ்கா் (30). இவா் வெள்ளிக்கிழமை மாலை குடிபோதையில் ஒரத்தநாடுக்கு பைக்கில் வந்தபோது நிலை தடுமாறி விழுந்து இறந்தாா். சடலத்தை போலீஸாா் மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.