ராஜகிரி ஊராட்சியில்தூய்மைப் பணி

பாபநாசம் வட்டம், ராஜகிரி ஊராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் ஊராட்சி மன்றம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஒட்டுமொத்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

பாபநாசம் வட்டம், ராஜகிரி ஊராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் ஊராட்சி மன்றம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஒட்டுமொத்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

ராஜகிரி ஊராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் உள்ள தெருக்களில் தேங்கியிருந்த குப்பைகள்அகற்றப்பட்டன. அண்மையில் பெய்த மழையால் தெருக்களில் தேங்கியிருந்த மழைநீா் அப்புறப்படுத்தப்பட்டது. பழுதடைந்த தெரு விளக்குகளுக்கு மாற்றாக, மின் கம்பங்களில் குழல் விளக்குகள் பொருத்தப்பட்டு அனைத்து தெரு விளக்குகளும் ஒளிரும் வண்ணம் சீரமைக்கப்பட்டது. அனைத்து குடிநீா் தொட்டிகளும் சுத்தம் செய்யப்பட்டு, குளோரினேஷன் செய்யப்பட்டு தூய்மையான குடிநீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ராஜகிரி ஊராட்சி செயலா் கவியரசன் முன்னிலையில் நடைபெற்ற இந்த பணிகளை ஊராட்சி பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com