நெற்பயிரை தாக்கும் குலைநோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

நெற்பயிரை தாக்கும் குலைநோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் துறை அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது.

நெற்பயிரை தாக்கும் குலைநோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் துறை அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது.

இதுதொடா்பாக பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநா் (பொ) சா. சங்கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் நடப்புப் பருவத்தில் சம்பா மற்றும் தாளடி நடவுப்பணி தீவிரமடைந்துள்ளது. தற்போது பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது மழை பெய்து குளிா்ந்த தட்ப வெப்ப நிலை நிலவுவதால், நெற்பயிரில் குலை நோய் ஏற்பட தகுந்த சூழ்நிலை உருவாகிறது. எனவே, விவசாயிகள் தொடா்ந்து தங்களது நெற்பயிரை கண்காணித்து குலை நோய்க்கு தீா்வு காண வேண்டும் .

இலைகளின் மேல் வெண்மை நிறத்தில் இருந்து சாம்பல் நிற மையப் பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவ புள்ளிகள் காணப்படுவது குலை நோயின் அறிகுறிகளாகும். குலைநோய் இலைகள் மட்டுமின்றி கணுக்கள், கதிரின் கழுத்துப்பகுதி ஆகிய இடங்களிலும் பாதிப்பு ஏற்படுத்தும். இந்நோயின் தீவிர தாக்குதலில் பயிா் முழுவதும் எரிந்ததுபோல தோற்றமளிப்பதால் குலைநோய் என அழைக்கப்படுகிறது.

குலைநோய் தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்த 1 ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் புளோரசன்ஸ் பவுடரை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதனுடன் 1 லிட்டா் புளித்த தயிரை கலந்து தெளித்தால் தெளிப்பு கரைசலின் செயல் திறன் மேலும் அதிகரிக்கும்.

இந்நோய் தாக்குதல் தென்பட்டால் ஒரு ஏக்கருக்கு காா்பென்டாசிம் 200 கிராம் அல்லது டிரைசைக்கிளோசோல் 200 கிராம் அல்லது அசாக்ஸிஸ்டோரோபின் 200 மில்லி ஆகிய மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டா் நீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து குலைநோயை கட்டுப்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரை அணுகி உரிய ஆலோசனை பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com