திருவையாறு அருகே பெரமூர் கிராமத்தில் வேளாண்மைத் துறை சார்பில் லாபகரமான முறையில் கறவை மாடு வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், அட்மா சீப்பர்ஸ் திட்டத்தின்கீழ் 2018 - 19 ஆம் ஆண்டுக்கான லாபகரமான முறையில் கறவை மாடு வளர்ப்பு குறித்து வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் சரசு விளக்கம் அளித்தார். தரமான கறவை மாடு எவ்வாறு இருக்க வேண்டும். மாடுகளுக்கு ஏற்படும் நோய்களை மூலிகைகளைக் கொண்டு எவ்வாறு சிகிச்சை அளிப்பது குறித்து உதவிப் பேராசிரியர் இளமுருகன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் மாதாலெட்சுமி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் வெங்கடேசன், பிருந்தா, உதவி வேளாண்மை அலுவலர் பாலமுருகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.