கார் உரிமையாளர் கைது

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் வாடகை பாத்திர கடை உரிமையாளர் கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் வாடகை பாத்திர கடை உரிமையாளர் கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திருபுவனம் தூண்டில் விநாயகம்பேட்டையைச் சேர்ந்த வாடகை பாத்திரக் கடை உரிமையாளர் வ. ராமலிங்கம் (45) பிப். 5-ம் தேதி இரவு அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிந்து பிப். 7-ம் தேதி 5 பேரையும், 9-ம் தேதி 3 பேரையும் என மொத்தம் 8 பேரை கைது செய்தனர்.இந்நிலையில், இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட காரை திருச்சி பாலக்கரையில் திருவிடைமருதூர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையைச் சேர்ந்த முகமது இப்ராஹிமை (47) திருவிடைமருதூர் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், முகமது இப்ராஹிமை பிப். 20-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com