பட்டுக்கோட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் பட்டுக்கோட்டையில் சனிக்கிழமை  நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் பட்டுக்கோட்டையில் சனிக்கிழமை  நடைபெற்றது.
இதில்,  பிப்ரவரி 16ஆம் தேதி மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெறவுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில மாநாட்டில் அனைத்து மதத்தவர்கள் ஒருதாய் மக்களாக, அண்ணன் தம்பிகளாக வாழ வேண்டும் என்ற கருத்து முன்னிறுத்தப்படுகிறது. எனவே, இந்த மாநாட்டில் தவறாமல் கலந்து கொள்ள  வேண்டும் என அனைத்து சமுதாய மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  
கூட்டத்துக்கு தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொருளாளர் மதுக்கூர் அப்துல்காதர் 
தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை பெரிய பள்ளிவாசல் இமாம் அயூப்கான் கிராத் ஓதி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி. நசுருதீன், தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ஜெய்னுல் ஆபீதீன், அதிரை பேரூர் தலைவர் கே.கே. ஹாஜா நஜ்முதீன், செயலாளர் வழக்குரைஞர் ஏ.முனாப் உள்ளிட்டோர் பேசினர்.  
தஞ்சாவூர், அதிராம்பட்டினம், மதுக்கூர், செந்தலைப்பட்டினம், ஆவணம், சம்பைப்பட்டினம், வண்ணாரப்பேட்டை ஆகிய ஊர்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com