பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு ஜெப வழிபாடு

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு ஜெப வழிபாடு அண்மையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு ஜெப வழிபாடு அண்மையில் நடைபெற்றது.
இப்பேராலயத்தில் பக்தர்கள் இன்னல்கள் நீங்கி சுகமடையவும், மன அழுத்தம் நீங்கிடவும், உலக மக்களின் நன்மைக்காகவும் மாதந்தோறும் 8-ம் தேதி புதுமை இரவு ஜெப வழிபாடு நடைபெறும். இதன்படி, அண்மையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோபி இமானுவேல் சிறப்பு வழிபாட்டை நடத்தினார். மேலும், அலங்கரிக்கப்பட்ட தேரில் புதுமை மாதா சொரூபம் ஆலயத்தைச் சுற்றி வந்தது. இதில், பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குநர் குழந்தைராஜ், உதவிப் பங்கு தந்தையர்கள் ஜேம்ஸ், ஜெயன், ஆன்மீகத் தந்தையர்கள் அருளானந்தம், இருதயம் அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com