தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே செந்தலை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ரத சப்தமி பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், குடமுருட்டி ஆற்றில் தீர்த்தவாரியும், பின்னர் வீதி உலா, வையாளி, புஷ்பாஞ்சலி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில், கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.