நிவாரணப் பணிகளில் ஈடுபட்டோருக்கு பாராட்டு

பட்டுக்கோட்டை வட்டம், சூரப்பள்ளம் கிராமத்தில் இந்திரா காந்தி யூத் பவுண்டேசன் அமைப்பு சார்பில், கஜா புயலின்


பட்டுக்கோட்டை வட்டம், சூரப்பள்ளம் கிராமத்தில் இந்திரா காந்தி யூத் பவுண்டேசன் அமைப்பு சார்பில், கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்காக நிவாரணப் பணிகளில் தீவிரமாக 
ஈடுபட்ட தன்னார்வலர்கள் 100 பேர் சனிக்கிழமை பாராட்டப்பட்டனர். 
இவர்களுக்கு புதுதில்லியில் பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி ஆர். சத்தியசுந்தரம் நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சிக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே. மகேந்திரன் தலைமை வகித்தார். திரைப்பட இயக்குநர் ஏ.சற்குணம், திமுக பேச்சாளர் ந.மணிமுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் டாக்டர் பா.சதாசிவம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். டி.சிவா வரவேற்றார். அ.வைரக்கண்ணு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com