தஞ்சாவூர் மாவ ட்டம், பேராவூரணி அருகே புயலால் சேதமடைந்து வெட்டப்பட்ட வாழை மரம் குலை தள்ளியதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.
பேராவூரணி பொன்காடு பெரியகுளம் அய்யனார்கோயில் அருகே ரெங்கசாமி என்பவருக்கு சொந்தமான வயல் உள்ளது. இங்கு அவர் சில வாழைக்கன்றுகளையும் நட்டு பராமரித்து வந்தார். அதில் ஒரு வாழைமரம் குலை தள்ளும் நிலையில் இருந்தபோது, கஜா புயலால் சாய்ந்து விழுந்தது. இதனால், வாழை மரம் அடியோடு வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. இந்நிலையில், வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற ரெங்கசாமி, வெட்டப்பட்ட வாழை மரம் குலையோடு இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் வெட்டப்பட்ட நிலையிலும் குலை தள்ளிய வாழையை ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.