ரோட்டரி சங்கம் சார்பில் அதிராம்பட்டினத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில், இங்குள்ள பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது.


அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில், இங்குள்ள பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.கே.சம்சுதீன் தலைமை வகித்தார். செயலாளர் இசட். அகமது மன்சூர், பொருளாளர் எஸ். சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கஜா புயலின் போது துப்புரவுப் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட அதிரை பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் 85 பேருக்கு பொங்கல் பண்டிகையையொட்டி தலா ரூ.500 மதிப்புள்ள அரிசி, கரும்பு, கைலி, போர்வை, பாய், டவல், மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருள்கள் கொண்ட பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.
அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் எம். நடராஜன், கே.வைரவன், எம்.முகமது தமீம், டி. முகமது நவாஸ்கான், கண்ணன் மற்றும் உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com