கோஷ்டி மோதல்: மூவர் காயம்

கும்பகோணத்தில் இருதரப்பினருக்கு இடையே  ஏற்பட்ட  கோஷ்டி மோதலில் 3 பேர் காயமடைந்தனர்.

கும்பகோணத்தில் இருதரப்பினருக்கு இடையே  ஏற்பட்ட  கோஷ்டி மோதலில் 3 பேர் காயமடைந்தனர்.
கும்பகோணம் மேலக்காவிரி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமார் மகன் கார்த்தி(24). இவரது நண்பர் செ.பிரகாஷ்(24).  இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை மாலை, மேலக்காவிரி ஈஎஸ்எம்பி நகர் சாலையில் நடந்துசென்று கொண்டிருந்த போது, சாலையிலிருந்த  மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கினார்களாம்.
இது குறித்து அப்பகுதியிலுள்ள இஸ்லாமியர் தட்டி கேட்டதற்கு, கார்த்தி மற்றும் பிரகாஷ், காளியம்மன் கோயில் தெருவிலுள்ள மற்ற நண்பர்களை அழைத்து வந்து,   சாலையிலிருந்த மற்ற மோட்டார் சைக்கிள்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.  இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், கார்த்தி மற்றும் பிரகாஷ், முகமதுஅலி மகன் 
சையது நஸ்ரின் 20) ஆகிய மூவரும் பலத்த காயம் அடைந்தனர்.
இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையப்   போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com