தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் தின விழா கொண்டாட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடம் முன்பு உள்ள திருவள்ளுவர் சிலைக்கு துணைவேந்தர் கோ. பாலசுப்பிரமணியன் மலர் மாலை அணிவித்தார். இந்நிகழ்வில், பல்கலைக்கழகப் பதிவாளர் ச. முத்துக்குமார், நிதி அலுவலர் (பொறுப்பு) இரா. முரளிதரன், கோட்டப் பொறியாளர் செல்வபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, கரந்தைத் தமிழ்ச்சங்க வளாகத்தில் உலகத் திருக்குறள் பேரவை, கரந்தைத் தமிழ்ச்சங்கம் சார்பில் திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது. விழாவுக்குக் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கே. ராஜமன்னார் தலைமை வகித்தார்.
உலகத் திருக்குறள் பேரவைச் செயலர் பழ. மாறவர்மன், நாவலர் ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரிச் செயலர் ஆர். கலியபெருமாள், புலவர் கந்தசாமி, கரந்தைத் தமிழ்ச் சங்கப் பள்ளித் தலைமையாசிரியர் சரவணன், ஆசிரியர்கள் ஜெயக்குமார், பத்மநாபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.