தஞ்சாவூரில் அஞ்சல் ஊழியர்கள் மாநாடு

தஞ்சாவூரில் தஞ்சை கோட்ட அஞ்சல் ஊழியர் சங்கத்தின் 35-வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூரில் தஞ்சை கோட்ட அஞ்சல் ஊழியர் சங்கத்தின் 35-வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோட்டத் தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார்.  மாநிலச் செயலர் கண்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முன்னாள் அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா சிறப்புரையாற்றினார். 
கோட்டத் தலைவராக மாரிமுத்து, உதவித் தலைவர்களாக நவநீதகிருஷ்ணன், மூர்த்தி, வைத்திலிங்கம், செயலராக பஞ்சநாதன், உதவி செயலர்களாக மணவாளன், ராஜமாணிக்கம், தீனதயாளன், பொருளாளராக ரவிச்சந்திரன், உதவிப்பொருளாளராக முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் மாநிலத் தலைவர்கள் வீராசாமி,  கலியபெருமாள்,  மாநிலப் பொருளாளர் வெங்கட்ரமணி, முன்னாள் உதவித் தலைவர் சாகுல் ஹமீது, கோட்டச் செயலர் பஞ்சநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com