கூட்டுப் பண்ணைய பயிற்சி வகுப்பு

தஞ்சாவூர்  மாவட்டம்,பாபநாசம் வட்டம் கருப்பூர் கிராமத்தில் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான

தஞ்சாவூர்  மாவட்டம்,பாபநாசம் வட்டம் கருப்பூர் கிராமத்தில் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் கூட்டுப் பண்ணைய பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
பாபநாசம் வேளாண் உதவி இயக்குநர்  மோகன் தலைமை வகித்தார். வேளாண் வணிகத் துறை அலுவலர் பிரதீப் உழவர் ஆர்வலர் குழு ,உழவர் உற்பத்தியாளர் குழு அமைத்தல், வங்கிக் கணக்குகள்  தொடங்குவது, சேமிப்புக் கணக்கில் மாதந்தோரும் பணம் செலுத்தி அதிலிருந்து விதைகள், உரம்,கழைக்கொல்லி ஆகியவற்றை வாங்கி பயன்படுத்துவது குறித்து விளக்கினார். மேலும் கூட்டு பண்ணை மூலம் கூட்டாக  வேளாண்மை செய்வதன் மூலம் இடுபொருள்கள் வாங்குவதில் சேமிப்பு,மற்றும் விளைபொருள்கள் விற்பதன் மூலம் கூடுதல் லாபம் பெறுதல் கூட்டுப்பண்ணையத்தின் நோக்கம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com