பேராவூரணியை அடுத்த மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி மற்றும் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது.
பேரணியை அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலைய, வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தலைமை ஆசிரியர் உஷா முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் முத்து கணேசன், எம்.ரவிச்சந்திரன், எஸ்.ஈஸ்வரன், சுகாதார மேற்பார்வையாளர் எம்.பாம்பன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.
பின்னர் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் 3 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவாக வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கே. பாஸ்கரன் நன்றி கூறினார்.