தஞ்சாவூரில் ஏறத்தாழ 7 மாதங்களுக்கு பிறகு புதன்கிழமை மாலை பலத்தக் காற்றுடன் கூடிய மழை பெய்தது.
மாவட்டத்தில் ஏறத்தாழ 7 மாதங்களாக மழை பெய்யவில்லை. அவ்வப்போது பெய்தாலும், தரையை நனைக்கும் அளவுக்குத் தூறலாகத்தான் இருந்து வந்தது. மாவட்டத்தில் சில நாள்களாக வெப்பம் கடுமையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், தஞ்சாவூரில் புதன்கிழமை மாலை 6 மணியளவில் பலத்தக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், மின்சாரமும் தடைப்பட்டது. இந்த மழை சுமார் ஒரு மணிநேரத்துக்கு நீடித்தது. இதன் மூலம், மாநகரில் வெப்பம் தணிந்தது.